Wednesday 29 October 2014

சர்வ வசீகரத்திற்கு ( சகல வசியம் )

கன்னி நூல் 

நிறைய சாஸ்திரங்களில் கன்னி நூல் என்று குறிப்பிட்டிருப்பார்கள் அது என்னவென்று யாரும் குறிப்பிட மாட்டார்கள் அதனுடைய உண்மை பொருளை நான் உங்களுக்கு விளக்கு கிறேன் 


கன்னி நூல் என்பது கன்னிகழியாத பிள்ளை கையால் நூல் நூற்க சொல்லி அந்த நூலில் மஞ்சள் தடவி வைத்துகொள்ள வேண்டும் இதுதான் கண்ணிநூல் இந்த கன்னி நூல் காப்புகட்டிதான் மூலிகை பிடுங்குவார்கள் .இதற்கு இன்னொரு முறையும் கூறுவார்கள் தாமரை தண்டை உடைத்தால் அதிலும் நூல் வரும் அதையும் உபயோகப்படுத்தலாம் .

சரி இனி வசியத்திற்கான முறையைப்பார்ப்போம் 

வெள்ளை எருக்கலன் வேர் 
செம்பருத்தி வேர் 
செவ்வகத்தி வேர் 

இந்த மூன்றையும் சாபம் நிவர்த்தி செய்து வேர் அறாமல் பிடுங்கி கொண்டுவந்து அந்த வேரை மேற்படி நூலால் தாயத்து போல சுற்றி கட்டி அதில் ஒரு கோழி அறுத்து ரத்தம் தெளிக்கவும் 

இதனை இப்போது உடலில் அணியக்கூடாது தேவைப்படும் பொது மட்டும் அணியவேண்டும் இதனால் சர்வ வசியமும் உண்டாகும் ஆண் பெண் வசியம் முதற்கொண்டு சகலமும் உங்களுக்கு வசியமாகும் 

இந்த தாயத்தை எப்போதும் அணிந்தால் விந்து நஷ்டமாகும் 


இதனை இடுப்பில் தொப்புளுக்கு நேராக கட்டிக்கொண்டு பெண்ணிடம் உடலுறவு கொண்டால் விந்து இறங்காது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உடலுறவு கொள்ளலாம் அந்த தாயத்தை முதுகு பக்கம் தள்ளிவிட்டால் உடனே விந்து வெளியேறும் .இதனை அடிக்கடி உபயோகிப்பது உடல் நலத்திற்கு கேடு விளையும் .


Saturday 18 October 2014

சகல தோஷங்களுக்கான யந்திரங்கள்

எங்களிடம் எல்லா வகையான தோஷங்கள் பரிகாரங்கள் செய்யும் விதத்தில் யந்திரங்கள் கிடைக்கும் இதை வாங்கி நீங்கள் அணிந்து கொண்டால் சகல விதமான திஷங்கள் கண் திருஷ்டி ,வாஸ்து போன்ற பிரச்சனைகள் முற்றிலுமாக நீங்கிவிடும் .


             
கிரக தோஷ யந்திரம்                  -                     
நவக்கிரக  யந்திரம் 
சூரியன் யந்திரம் 
சந்திர யந்திரம் 
செவ்வாய் யந்திரம் 
புதன் எந்திரம் 
குரு  யந்திரம் 
சுக்கிர யந்திரம் 
சனி யந்திரம் 
ராகு யந்திரம் 
கேது யந்திரம் 

குழந்தைகளின் சகல தோஷங்களுக்கும் யந்திரம் 
பட்சி தோஷம் 
எட்சி தோஷம் 
ஆண் தோஷம் 
பெண் தோஷம் 
வாஸ்து தோஷ யந்திரம் 
வீடு கட்டும் பொது அதில் புதைத்து வைக்க யந்திரம் 

மகாலக்ஸ்மி யந்திரம் 
புவனேஸ்வரி யந்திரம் 
சரஸ்வதி யந்திரம் 
அனுமன் யந்திரம் 
சுப்ரமணியர் யந்திரம் 
அருபத்திமுக்கோண யந்திரம் 
பஞ்சாட்சர யந்திரம் 
வியாபார வசிய யந்திரம் 

அன்ன பூரணி யந்திரம் 
ஏவல் பில்லி சூன்யம் நீக்க யந்திரம் 
கணவன் மனைவி வசிய யந்திரம் 
காரிய சித்தி யந்திரம் 
எதிரியை அடக்க யந்திரம் 
ராஜ குபேர யந்திரம் 
ராஜ வசிய யந்திரம் 

இன்னும் பல வகையான உங்கள் பிரச்சனைகளை தீர்க்கும் யந்திரங்கள் எங்களிடம் உள்ளன வாங்கி பயன் பெறுவீர்.



ஆண் பெண் வசிய பிரயோகம்

வசிய வகைகள் அதன் குணங்களும் விளைவுகளும் 


வசியம்

வசியம் என்பது ஐந்து விதங்களிலே செய்யப்படுகின்றது இதனை செய்பவர்கள் தம் முழு நம்பிக்கையும் அதன் மேல் செலுத்தியே செய்கின்றனர். அவ்வைந்து வசியங்களையும் கீழ்வருமாறு நோக்கலாம்.

1. ராஜவசியம்

தேவைப்படும் நபர்களின் பெயர்களைப் பதித்து, அவர்களை வசியப்படுத்தி வைத்திருக்க வேண்டும் எனும் நோக்குடன் செய்யப்படுகின்றது. அநேகமாக யாரேனும் ஒருவர் எதிரியாக இருந்தால் அவரை தம்முடன் நன்றாகியிருக்க வேண்டுமென வசியம் செய்யப்படும்.

2. லோக வசியம்

இது ஜனங்களையும், தெய்வங்களையும் ஆவிகளையும் வசியம் செய்து கொள்வதை குறிக்கின்றது. லோக வசியம் அநேகமானேரால் நடைமுறையில் செய்யப்பட்டு வருகின்றது. கூடுதலாக இதனை பலரும் விரும்புகின்றனர்.

3. சர்வ வசியம்

இது      ஆவிகளை வசீகரித்து வைத்து, காரியங்களையும் செய்யும்படிக்கு செய்யும் வசியமாகும். ஆவிகளை வசீகரப்படுத்தி செய்யும்  மந்திரம் 

4. மிருக வசியம்

இது மனிதர்கள் தெய்வங்களை வசீகரப்படுத்தப்படுவதைப்போல மிருக ஜீவன்களையும் வசிகரித்தலாகும். உதாரணமாக எடுத்துக் கொண்டால் மிகவும் கொடூரமான நாய் இருக்கும் வீட்டில் களவு செய்ய வேண்டுமானால் அந்த நாயிலிருந்து தப்பும் முகமாக அதனை வசப்படுத்தச் செய்யும் வசியமாகும்.

5. ஆண் பெண் வசியம்

இது தமது காதல், திருமணம் என்பன தடைப்பட்டிருப்பவர்கள் ஆண் பெணையோ பெண் ஆணையோ வசியம் செய்து தமது காதல் ஆசையை அல்லது திருமணத்தினை நடாத்தும்படி வசியப் படுத்துவதாகும். இவ்வசியம் செய்யவதற்கு குறிப்பிட்ட நபரினது பாவனைப் பொருட்கள்  ஏதேனும் இருந்தால் தான் நல்லது இல்லாவிட்டாலும் வசியம் செய்யலாம். இவ்வசிய முறையானது இரண்டு முறைகளிலே செய்யப்படுகின்றது

1. சாதாரண தரம்                               
2. உயர்தரம்

 சாதாரண தரம்

இதனைச் செய்ய நாட்கள் சற்று அதிகம் தேவைப்படும் இதற்கான பொருட்கள் சாப்பாடு, விபூதி, எண்ணெய், என்பவற்றைப் பயன்படுத்தி, சாப்பிடக் கொடுத்தால் அல்லது எண்ணெய் உடுப்புகளில் தேய்த்தால் அல்லது தலைமயிரில் தேய்த்தால் இது நாளடைவில் பலனளிக்கும் .இச்சாதாரணதர வசியமானது சற்று செலவு குறைந்தாக காணப்படுகின்றது.

உயர்தரம்

இவ்விசயம் செய்வதற்கு பணச்செலவானது சற்று அதிகமாகும். ஓர் ஆணுக்கு வசியம் செய்ய வேண்டுமானால் அந்த ஆணின் வலது காலில் ஒரு துளி இரத்தம் எடுத்து, அதனை மந்திர வசியம் செய்வதற்காக பயன்படுத்தும் ஐவகை எண்ணெய், மூலிகையுடன் கலந்து இரவு நேரத்திலே, வசியம் செய்பவரினதும் (யாருக்கு) செய்யும்படி சொன்னாரோ அவரின் பெயரையும் உச்சரித்து, மோகினி ஆவியின் பெயரைக் கூறி  ஒரு நாளுக்கு 1008 தடவையாக முறையாக 7 நாட்களுக்கு எந்திரம் வைத்து தேசிக்காய் எடுத்து எண்ணெயின் மேல் கொண்டு போகையில் எண்ணெயில் அசைவுகள் தென்படும். (இது ஆண் செய்ய வேண்டும்) இவ்வெண்ணெயினை பெண் சுண்டு விரல், உடுப்பு, நெற்றியில் வைத்து பார்த்தல், சாப்பாட்டில் கலந்து முதுகில் எந்திரம் வைத்து நினைத்தால் அவளுக்கு அது தெரியும். அப்போது வா என்று கூறினால் அவள் வருவாள். இதுதான் உயர்தர வசியமாகும்.

 அசுத்த ஆவிகள்

வசியம் செய்யப்படுகையில்   ஆவிகளுடன் தொடர்பு ஏற்படுகின்றது. ஆவிகளுடன் பேசுதல் என்பது தெய்வங்களின் ஆவிகளுடன் பேசுதல் என்று கூறுவர். இங்கு தெய்வத்தின் ஆவிகளாக  தெய்வங்களையே குறிப்பிடப்படுகின்றது. இரண்டாவதாக செத்த மனித ஆவிகளுடன் பேசுதல் ஆவிகளோடு பேசுதல் எனப்படும்.

 ஏவல் பில்லி சூனியம்

ஏவல் பில்லி சூனியம் என்பன ஆவிகளை ஏவி விடுதல் எனப்படும். இது பின்வரும் மூன்று முறைகளில் செய்யப்படும்.

தெய்வம் எனும் ஆவிகளை ஏவி விடுதல் உம் - முனி, காளி,

செத்த ஆவிகளை ஏவி விடுதல்

மிருகங்கள், ஊர்வனவற்றை ஏவி விடுதல்

நாய் கடிக்கும்படி

மாடு முட்டும்படி

பாம்பு கொத்தும்படி

மந்திரம் பில்லி சூனியம் வசியம் எனபவற்றால் ஏற்படும் விளைவுகள் 

1. பணவிரயம்

2. ஏமாற்றம்

3. மரணம் ஏற்பட வாய்ப்புண்டு


நீங்காத செல்வ வளம் பெறுவதற்கு யந்திர பிரயோகம்

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது சான்றோர் வாக்கு. மனித மனம்  மண், பொன், பெண் இந்த மூவசைகளையும் சுற்றியே அலைப்பாய்ந்து வருகிறது. மனித வாழ்வுக்கும் அஸ்திவாரமாக இந்த மூவசைகளே விளங்குகிறது. மனித மனம் செல்வத்தில் அந்தஸ்த்தில் புகழில் மற்றவனை கட்டிலும் நாம் தான் சிறந்து விளங்க வேண்டும் என்று போராடுகிறது. இந்த முயற்சியில் தான் ஒவ்வொரு மனிதனும் போராடி வருகிறான்.

            பிறக்கும் போதே ஒருவன் செல்வ செழிப்பான பெற்றோருக்கு பிறப்பதும், ஏழ்மையில் வாடும் பெற்றோருக்கு பிறப்பதற்கும் காரணம் அவரவர்களின் உழ்வினையே. சரி உழ்வினையை அறுத்து நாமும் செல்வ செழிப்பில் குபேர அந்தஸ்தை அடைய முடியுமா என்று ஒவ்வொரு மனிதனும் பல வழிகளையும் தேடி அலைகிறான். 



தற்காக ஜாதகம் பரிகாரம் மந்திரம் எந்திரம் தந்திரம் கோவில் குளம் என்றும் தேடி அலைகிறான். அந்த போக்கில் தவறான நபர்களிடம் மனிதன் சிக்கி தவிக்கின்றான் எப்படி எத்தனை காலம் தேடி அலைந்தாலும் அவ்வாறு ஒரு குபேர அந்தஸ்தை யாராலும் அடைய முடியவில்லை.

                இன்று ஒரு வியாபாரத்தை செய்வதனால் லட்சங்கள் கோடிகள் மில்லியன்கள் பில்லியன்கள் என்று முதலீடு செய்து வியாபாரங்களை நடத்தி அதில் வெற்றியை பெற்று குபேர அந்தஸ்தை அடைந்தவர்கள் ஒரு சிலர். வியாபாரத்தில் தோல்வியடைந்து முதலீட்டையும் இழந்து மேலும் கடன் பட்டு காணாமல் போனவர்கள் பல பேர். 

இந்த யந்திர பிரயோக முறைகளினால் உங்கள் கர்ம வினைகள் யாவும் மாறி உங்கள் ஜாதக தோஷங்கள் யாவும் போகும். உங்களையும் குபேர அந்தஸ்தை பெற வைக்கும். உங்கள் உடலில் உள்ள தீராத நோய்களும் சூரியனை கண்ட பனிபோல் விலகும். உங்களை கண்டு எதிரிகள் நடுநடுங்கி ஓடுவார்கள். பேய் பிசாசு மோகினி ஏவல் பில்லி சூனியம் கண்திருஷ்டி யாவும் பறந்தோடும். இந்த லக்ஷ்மி குபேர சஞ்சீவி இருக்கும் இடத்தில் உள்ள வாஸ்து குற்றங்களும் நீங்கும்.


சகல செல்வங்களையும் அள்ளித்தரும் மஹாலக்ஷ்மி லோக வசிய யந்திரம்

இதுவரை பலரும் சொல்லி வருவது தன வசியம், தொழில் வசியம், வியாபார வசியம், குபேர வசியம் எனும் முறைகளை தான் இந்த முறைகள் மூலம் பொரும் தனத்தை அடைந்தவர்கள், வியாபாரத்தில் பெரும் வெற்றிகளை குவித்தவர்கள்

தொழிலில் மிகப் பெரிய பேரும் புகழும் செல்வமும் அடைந்தவர்கள் எத்தனை பேர் என்றால் ஒரு சிலரே. ஏனென்றால் தனக்கு பிரபஞ்ச  சக்திகள் வசியமாகி செயல்படாத போது, இந்த வசிய முறைகளை யார் பயன்படுத்தினாலும் வெற்றி தராது.



ஆனால் திரு முத்துபாண்டி வைத்தியர் அவர்கள்  கண்டெடுத்து அனுபவத்தில் பலருக்கும் செய்துகொடுத்து பயனடைய செய்து பேரும், புகழும், பெரும் பண வசதிகளையும் அடைய வைத்த இன்று வரையில் யாரிடமும் உலகில் இல்லாத ஒரு முறைதான் மகாலக்ஷ்மி லோக வசிய யந்திரம் . 

இந்த மஹாலக்ஷ்மி லோக வசிய யந்திரம் அணிவதன் மூலம் மிக குறுகிய காலத்தில் உங்கள் தொழில் அல்லது வியாபாரத்தில் பேரும் புகழும் பெற்று மிகப் பெரும் தன வசதிகளை அடையச்செய்யும்,  இதனை அணிபவர்கள் பெற முடியாத பலன்கள் ஏதுமில்லை


இந்த யந்திரங்கள் கடைகள் வியாபார ஸ்தலங்கள் அலுவலகங்கள் இவற்றில் வைக்க எதுவாக பெரிய யந்திரமாகவும் கைகைகளில் கழுத்தில் இடுப்பில் அணியும் விதமாக தாயத்துகளாகவும் செய்து தரப்படும் .  

அஷ்ட கர்மங்கள் செய்ய தெரிந்திருக்க வேண்டியவைகள்

அஷ்ட கர்மங்கள் என்னும் எண் தொழில்கள் செய்ய வேண்டுமானால் அதற்கான விதி முறைகள் சரி வர பயன் படுத்தவில்லை என்றால் அந்த வேலைகள் வெற்றி அடையாது .


அதற்காக நாம் எந்த திசை எந்த கிழமை எந்த திரி எந்த எண்ணெய் என்று சரியாக பயன் படுத்தினால் மட்டுமே வெற்றியடைய முடியும் .

எண்ணெய் மற்றும் திரிகள் 

அஷ்ட கர்மங்கள்               எண்ணெய் & திரி 

1. வசியம்                            -      காராம் பசு நெய்& தாமரை நூல் திரி 

2. தம்பனம்                         -       ஆதளைக்கொட்டை எண்ணெய் & பஞ்சுத்திரி  

3. மோகனம்                       -       நல்லெண்ணெய் & கன்னி நூல் திரி 

4.  உச்சாடனம்                   -       புங்கெண்ணெய் & இலவம்பஞ்சு திரி 

5. பேதனம்                           -       புன்னைக்கொட்டை எண்ணெய்& துணித்திரி 

6. ஆகர்ஷணம்                  -       எரண்டத்து எண்ணெய் & வெள்ளெருக்கன் திரி 

7. வித்வேஷனம்               -        பசு+ஆடு+பன்றி நெய் & தாமரை நூல்திரி   

8. மாரணம்                           -        வேப்பெண்ணெய்& வேலிப்பருத்தி திரி 

மேலே சொல்லிய எண்ணெய் மற்றும் திரி வகைகளை போட்டு விளக்கேற்றி அந்தந்த காரியங்களுக்கு உண்டான மந்திரங்களை ஜெபம் செய்ய அந்த காரியங்களில் எளிதில் வெற்றியடையலாம்.

கிழமைகள் 

அஷ்ட கர்மங்கள்                 கிழமைகள் 

1. வசியம்                            -      ஞாயறு 

2. தம்பனம்                         -       புதன் 

3. மோகனம்                       -       திங்கள் 

4.  உச்சாடனம்                   -       வியாழன்  

5. பேதனம்                           -       செவ்வாய்  

6. ஆகர்ஷணம்                  -       வெள்ளி  

7. வித்வேஷனம்               -       செவ்வாய் 

8. மாரணம்                           -       சனி  

திசைகள் 

அஷ்ட கர்ம பெயர்                திசைகள் 

1. வசியம்                            -      கிழக்கு 

2. தம்பனம்                         -       தென்மேற்கு 

3. மோகனம்                       -       தெற்கு 

4.  உச்சாடனம்                   -       மேற்கு 

5. பேதனம்                           -        வடக்கு 

6. ஆகர்ஷணம்                  -        வடமேற்கு 

7. வித்வேஷனம்               -        தென்மேற்கு 

8. மாரணம்                           -        தெற்கு 

உடைகள் 

வசியம்              -         சிவப்பு 

மோகனம்         -          மஞ்சள்

பேதனம்            -           வெள்ளை

சகல கர்மம்     -            தனி பட்டு 

உலோகம் 

வசியம்              -          காரியம் 

மோகனம்          -          வங்கம் 

ஆகர்சனம்          -         பொன் 

தம்பனம்              -          செம்பு

உச்சாடனம்       -          வெள்ளிஈயம் 

வித்வேஷனம் -           குருத்தோலை 

பேதனம்              -           இரும்பு 

மாரணம்              -         வெள்ளி 

அஷ்ட கர்ம செயல்களான வசியம், ஆகர்ஷணம், மோகனம், வித்வேஷனம், தம்பனம், உச்சாடனம், பேதனம், மாரணம் ஆகிய காரியங்களுக்கான நூல் இழை கணக்கினை நாம் தெளிவாக அறியமுடிகிறது. அவையாவது :

வசியம்               - 2 இழை

மோகனம்          - 3 இழை

தம்பனம்            - 4 இழை

உச்சாடனம்        - 4 இழை

ஆகர்ஷணம்     - 2 இழை

வித்வேஷனம் - 3 இழை

பேதனம்             - 5 இழை

மாரணம்             - 6 இழை  

இவற்றை தெளிவாக கவனத்தில் கொண்டு அந்தந்த எந்திரங்கள் எழுதும்போது அதற்குரிய இழை கணக்கில் அதற்குரிய வண்ண நூலால் கட்டி மந்திரங்களை உருவேற்றினால் அந்த காரியங்கள் ஜெயமுடன் முடியும்.



சீறி அழும் குழந்தைகளுக்கான கணபதி யந்திரம்

நிறைய வீடுகளில் குழந்தைகள் இருக்கும் இந்த குழந்தைகள் மட்டும் ஏன் அழுகிறது எதற்காக அழுகின்றது என்று பெற்ற தாயாராலே கண்டுபிடிக்க முடியாத ஒரு சூழ்நிலையில் பல குடும்பங்கள் தத்தளிக்கின்றது .அதற்கு காரணம் என்ன என்றால் அவர்களுக்கு இந்த யந்திர மந்திரங்களின் மேல் நம்பிக்கை இல்லாததுதான் காரணம் .

எங்கள் அனுபவங்களை கூறுகிறோம் 

சிறு குழந்தைகள் திடீர் திடீர் என பயந்து அழுது விடும் அந்த இடத்தில் யாரும் வந்து பயம் காட்ட கூடிய வாய்ப்பே இல்லை ஆனாலும் குழந்தை அழுகின்றதே ஏன்? ,

அடுத்து இரவு நன்றாக குழந்தை தூங்கி கொண்டிருக்கும் பொது திடீர் என அழும் .திடீர் என பேதி ஆகும் அதற்கு மருத்துவரிடம் காண்பித்தால் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறுவார்கள் .

இப்படி எதனால் ஆகிறது என்றால் இளம் குழந்தை மனோதிடம் இல்லை எந்த ஒரு தேவதையும் வந்து உடலின் உள்ளே ஏறி பல இன்னல்களை கொடுக்கும் அடிக்கடி நோய் வந்துகொண்டே இருக்கும் .இதனைத்தான் பால கிரக தோஷம் ,பாலாரிஷ்டம் என்று கூறுவார்கள் 

இந்த தோஷங்களில் இருந்து நீங்க வேண்டுமானால் எங்களிடம் கணபதி உள்ளதை அதை வாங்கி குழந்தயின் இடுப்பிலோ அல்லது கழுத்திலோ அணிந்து கொண்டால் எந்த ஒரு தேவதைகளும் இக்குழந்தையிடம் அணுகாது பாது காத்து கொள்ளலாம்  

எதற்காக இதில் கணபதியை குறிப்பிட்டுள்ளோம் என்று கூறினால் தொஷங்களுக்கே தோஷம் கொடுப்பவர் கணபதி என்கிற காரணத்தால் கணபதி யந்திரத்தை அணிந்து கொண்டால் எல்லா தோஷங்களும் பறந்தோடும் .

இது தவிர பல தேவதைகள் குழந்தைகளை அண்டும் அதனை இந்த தேவதைதான் இந்த குழந்தையின் உடலில் இருக்கிறது என்று கண்டறிய ஒவ்வொரு தேவதைகளும் வித விதமான அறிகுறிகளை உடலில் காட்டும் அதை வைத்து கண்டுகொள்ளல் வேண்டும் 

அந்த தேவதைகளின் பெயர்கள் 

தாட்சி வாட்சி 
நீலகண்டி
விரோத கன்னி
உத்திர காலாக்கினி
சின்னு 
வைத்திரி
உத்திர கவுரி 
மாதங்கி
குணத்தி வாயாக்கினி
ஆகஞ்சு
சடாதரி
அரக்கி உச்சங்கி
பிடாரி
மடன்
மயான ருத்திரி
தெய்வக்கன்னி

இந்த தேவதைகளின் பிடியில் குழந்தைகள் இருந்தால் அந்த குழந்தையின் உடலில் பல நோய்கள் வரும் சோர்வு ,வாந்தி,பாலுண்ணாது இப்படி நோய்கள் வந்தனுகும் இதற்கென்று தனித்தனியாக பூஜை முறைகள் உண்டு அதை விட கணபதி யந்திரமே சிறந்தது .இந்த கணபதி யந்திரத்தை கொடுத்து அனுபவத்தில் பல குழந்தைகள் சரியாக ஆகி இருக்கின்றனர் அதனால் தான் நாங்கள் இதை கூறுகின்றோம் . 


Saturday 11 October 2014

இசக்கி அம்மன் மந்திர பிரயோகம்

எங்கள் பகுதிகளில் இசக்கி அம்மன் என்று ஒரு காவல் தெய்வத்தை தெய்வமாக வணங்கி வருகின்றனர்.அவரவர் தோட்டத்தில் கன்னி மூலையிலே இந்த தெய்வத்தை பிரதிஷ்டை செய்து அதற்கு எண்ணெய் மஞ்சனம் என்று குங்குமங்கள் சாத்துவார்கள் அதை குளிமை படுத்துவதற்காக நல்லெண்ணெய் சாத்துவார்கள் அதற்கு சிவப்பு பட்டு உடுத்தி அரளி மாலை அணிவிப்பார்கள் 



இந்த தேவதையானது இடது புறம் இடுப்பில் ஒரு குழந்தையை வைத்து கொடு இருக்கும் ஒவ்வொருவர் தோட்டங்களிலும் காவல் தெய்வமாக இருந்து வருகிறது .இதற்கு ஒரு கருங்கல் நடப்பட்டு இதற்கு பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்திலே அதற்கு பொங்கல் வைத்து பலி கொடுத்து கொடை விழா போல சிறப்பாக நடத்துவார்கள் ஒவ்வொரு தோட்டங்களிலும் .

இந்த தெய்வத்தை வைத்து பல மாந்திரீக வேலைகளை  மாந்திரீகர்கள் செய்வார்கள் இந்த விஷயம் மிகவும் சூட்சமமான விஷயம் இது எனது தாத்தா முத்து பாண்டி வைத்தியர் கூறிதான் எனக்கு இதை போல பல விஷயங்கள் தெரிய வந்தது இப்போது கூட தினமும் பாடம் எடுப்பார் .

இசக்கி அம்மன் வசியம்  

இந்த இசக்கி அம்மனை வசியம் செய்து சித்தி செய்து கொண்டால் ஒருவர் குடும்பத்தை அளிக்க வேண்டும் என்று கூறினால் அந்த குடும்பத்திற்கு வரும் நல்ல விசயங்கள் யாவும் தடை பட்டு நிற்கும் நோய் நொடிகள் அதிகம் வரும் அவர்கள் வீட்டில் யார் மேலாவது ஆட்டம் வரும் சாமி ஆட்டம் ,இப்படி அந்த குடும்பத்தை உபத்திரம் செய்யும் .

இப்படி இந்த தேவதையை வசியம் செய்யாமலும் பல விஷயங்கள் செய்யலாம் அது ஒரு குறுப்பிட்ட தூரம் வரைதான் வேலை செய்யும் இந்த தேவதை வைத்து மாந்திரீக வேலை செய்வதால் இதற்கு வாரம் ஒரு முறை கோழி பலியிட வேண்டும் .சரியான தருணத்தில் கொடுக்க வில்லை என்றால் அந்த தேவதை நம் வீட்டில் உள்ளவர்களை நிம்மதியாக இருக்க விடாது .

ஏவல் செய்தால் இப்படித்தான் நடக்கும் 

இந்த தேவதை நமக்கு நல்ல முறையில் வேலை செய்யும் நாம் ஏவல் செய்த இடம் மிகுந்த பக்தி உள்ளவர்களாகவும் தெய்வ பலம் அதிகம் உள்ளவர்களாகவும் இருந்தால் அது மறு படியும் நம்மிடம் வந்து உபத்திரம் செய்யும் இந்த தேவதை வைத்து மாந்திரீகம் செய்தால் பல் இன்னல்களுக்கு ஆளாக வேண்டி இருக்கும் .

அதனால் பெரிய தெய்வங்களை நாம் சித்தி செய்து கொண்டால் நமக்கு எந்த பயமும் வேண்டாம் இந்த விசயங்கள் யாரும் வெளி விட மாட்டார்கள் நான் தான் நிறைய ஆன்மிக அன்பர்கள் சரியான குரு கிடைக்காமல் அல்லல் படுகின்றனர் அவர்களுக்கு இந்த விஷயங்கள் மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும் .


isakki amman thevathai   


திருமண தடை நீங்க யந்திரம்

இப்போது தமிழகத்தை பொறுத்த வரையில் எல்லா குடும்பத்திலும் நம் மகனுக்கு நல்ல வரன் அமைய வில்லையே நாம் நினைத்த அளவிற்கு பெண் கிடைக்க வில்லையே?பையனின் வயது அதிகம் ஆகிக்கொண்டே போகின்றது .என்ன செய்யலாம் .



ஜோதிடர்கள் கூறினார்கள் என்று தோஷங்கள் எல்லாம் கழித்து விட்டோம் அதற்கு பிறகும் திருமணம் கூட வில்லையே என்று ஒவ்வொரு குடும்பத்தாரும் தத்தளிக்கின்றனர் .

அதி சரி செய்வதற்காக நாங்கள் அதற்கான யந்திரங்கள் தாயத்துக்கள் மஞ்சள் அல்லது திருநீறு குங்குமம் என்று பல முறைகளில் இந்த களத்திர தோஷத்தை களைவதற்கான எந்திரங்கள் இருக்கின்றன .அதன் படி நீங்கள் செய்தால் நிச்சயமாக 41 நாட்களுக்குள் நல்ல வரன் அமையும் என்பது உறுதி திரு முத்துபாண்டி வைத்தியர் அவர்கள் வாய் பேசாதவர்கள் ஊனமுற்றவர்களுக்கு கூட யந்திரங்கள் கொடுத்து பலருக்கு திருமணம் நடந்திருக்கிறது ..

உங்களது தோஷம் உங்களை விட்டு விலகி நின்றால் திருமண தடை எல்லாம் நீங்கி விடும் .அதற்கான முயற்சிதான் இந்த யந்திர பிரயோக முறைகள் .இதன் படி நீங்கள் வாங்கி அணிந்து பாருங்கள் .நிச்சயம் நல்ல வரன் அமையும் என்பது உறுதி 

திருமண தடைக்கான காரணங்கள் :

  • பெண்வீட்டார் என்றால் பெண்ணுக்கு கொடுக்க போதிய பணம் இருக்காது இதுவும் ஒரு வகையான திருமண தடைதான் இதையும் சரி செய்யலாம் 
  •  
  • நமது அந்தஸ்துக்கு தகுந்த கணவன் கிடைக்க வேண்டும் கிடைத்தாலும் அது எதோ ஒரு வழியில் தவறி போய் விடும் 
  •  
  • எவ்வளவோ தேடியும் அழகான குடும்பத்தில் பெண் கிடைத்தால் கடைசியில் ஜாதக பொருத்தம் இருக்காது 
  •  
  • நமது ஊருக்குள்ளேயே நல்ல பெண் அமைந்தால் யாராவது நம்மை பற்றி தவறான விசயங்களை கூறி மனம் மாற்றி விடுவார்கள் 
  •  
  • நாம் நேசித்த பெண்ணை திருமணம் முடிக்க வேண்டுமென்றால் அவர்கள் குடும்பத்திலோ அல்லது நம் குடும்பத்திலோ சம்மதிக்க மாட்டார்கள் .


இப்படி பல விதங்களில் தடை களத்திர தோஷம், செவ்வாய் தோஷம், மாங்கல்ய தோஷம் ,இப்படி பட்ட தோஷங்கள் எல்லாம் நம்மிடம் பாதுகாப்பான நல்ல கதிர்வீச்சுகள் இல்லாத காரணத்தினால் தான் நம்மை வந்து தாக்குகின்றன .அதனால் நாங்கள் கொடுக்கும் யந்திரங்கள் கிரகங்களினால் வரும் பாதிப்புகளை அகற்றி நல்வாழ்வுக்கு வழிவகுக்கும் .

thirumana thadai thosham   


Friday 10 October 2014

நவக்கிரக பாதிப்பிற்கான யந்திரங்கள்

நவக்கிரகங்கள் ஒன்பதுவும் நேரடியாக ஒவ்வொரு மனிதனையும் பாதிக்கின்றன .கிரகங்களில் இருந்து வரும் கதிர்வீச்சானது நேரடியாக மனிதனை சோர்வுறச்செய்கிறது. மனிதனின் மனத்தை மாற்றுகிறேது் பெண்கள் மேல் மோகமுறச்செய்கின்றது என்ன செய்தால்என்ன என்ற  ஒரு ஆணவம் ஏற்படுகிறது எல்லாம் எனக்கு தெரியும் என்ற அகங்காரம் ஏற்படுகின்றது.



.இந்த காரணங்களால் மனிதன் மீள முடியாத கடன் தொல்லைக்கு ஆளாகின்றான் .அல்லது பெரிய பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டு சிக்கி தவிக்கின்றான் .இந்த கிரகங்கள் அவனை மட்டும் அல்லாமல் அவன் குடும்பமும் தனால் பாதிப்புக்குள்ளாகிறது .

இப்படிப்பட்ட நவக்கிரக பாதிப்பிலிருந்து விடுபட வேண்டுமானால் கிரகங்களிலிருந்து ஒரு கதிர் வீச்சு மனிதனை தாக்குகிறது .அந்த கதிர் வீச்சானது நமக்கு நன்மை செய்யும் விதத்தில் அமைத்து கொள்ள நம்மிடம் யந்திரங்களில் மந்திர உருக்கள் ஏற்றி வைத்திருந்தால் இந்த யந்திரத்திலிருந்து ஒரு வகையான நல்ல கதிர்வீச்சு நமக்கு நன்மை அளிக்கும் விதத்தில் இருக்கும் 

.பெரிய மகான்கள் முனிவர்கள் சித்தர்கள் இவர்களுக்கு ஏன் கிரக பாதிப்புகள் வருவதில்லை ஏனென்றால் இவர்கள் உடம்பில் இருந்து ஒரு தெய்வீக சக்தி பிரகாசிக்கும் அதற்கு காரணம் என்னவென்றால் அவர்கள் கூறிய மந்திர ஒலி  அதிர்வுகள் தான். 

இப்படி நாம் அனைவருக்கும் கிரகங்களின் பாதிப்புகள் தோஷங்களில் இருந்து விடுபட வேண்டுமால் எந்த கிரகம் பலகீனமாக இருக்கிறதோ உங்கள் ஜாதகத்தில் அதனை கண்டறிந்து அதற்கான எந்திர தாயத்துக்கள் கிலோ கழுத்திலோ அணியலாம் இல்லைஎன்றால் எந்த ஒரு கிரகத்தினாலும் பாதிப்ப் அடையாமல் என் குடும்பத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் அதற்கான யந்திரங்களை வீட்டில் பூஜை அறையில் வைத்து வழி படலாம் .இந்த முறை மிகவும் சிறந்த முறை .

நவக்கிரகங்களால் ஏற்படும் பாதிப்புகள் :

நோய் நொடிகள் உருவாகின்றன.
உடல் சோர்வு 
வேலை செய்யும் இடத்தில் தூக்கம் வருதல் 
நான் என்ற அகங்காரம் ஏற்பட்டு யாரிடமும் ஆலோசனை கேட்காமல் ஒரு சில கடன்தொல்லைகளில் அகப்படுதல் .
வாகன விபத்துக்கள் ஏற்படுதல் 
வீட்டில் உள்ளவர்களுக்கு நோய் வந்து வந்து போகும் 
கெட்ட கனவுகள் வருதல் 
வாழ்க்கையை பற்றிய பயம் ஏற்படுதல் 
தன்னம்பிக்கை இல்லாமை .

இவைகளை போக்கும் யந்திரங்கள் :

நவக்கிரக யந்திரம் 
சூரியன் யந்திரம் 
சந்திரன் யந்திரம் 
செவ்வாய் யந்திரம் 
புதன் யந்திரம் 
குரு யந்திரம் 
சனி யந்திரம் 
ராகு யந்திரம் 
கேது யந்திரம் 
செவ்வாய் தோஷ யந்திரம் 
திருமண தடைக்கான யந்திரம் 
களத்திர தோஷம் யந்திரம் 
பித்ரு தோஷம் யந்திரம்
குடும்ப தோஷம் 
சகோதர தோஷம் 
மனை தோஷம் 
புத்திர தோஷம் 
பூர்வீக சாப தோஷம் 
செய்வினை தோஷம் 
நாக தோஷம் 
பட்சி தோஷம் 
மாங்கல்ய தோஷம் 
தார தோஷம் 
கால சர்ப்ப தோஷம் 
பித்ரு தோஷம் குல தெய்வ தோஷம் 
மாந்தி தோஷம் 

இந்த ஜோதிட சம்பந்தமான தொஷங்களுக்கான யந்திரங்கள் கிடைக்கும் 
நல்ல முறையில்; யந்திரங்கள் முறைப்பாடு உருவேற்றி கொடுக்கப்படும் ஜோதிடர்கள் குறி சொல்பவர்கள் தனிநபர்களும் பெறலாம் மிகவும் சக்தி வாய்ந்தவைகள் பல தலைமுறை கண்ட அனுபவ சாத்திர முறைகள் .

THOSHAM ,NAVAKKIRAKAM