Showing posts with label சகல வசியம். Show all posts
Showing posts with label சகல வசியம். Show all posts

Wednesday, 29 October 2014

சர்வ வசீகரத்திற்கு ( சகல வசியம் )

கன்னி நூல் 

நிறைய சாஸ்திரங்களில் கன்னி நூல் என்று குறிப்பிட்டிருப்பார்கள் அது என்னவென்று யாரும் குறிப்பிட மாட்டார்கள் அதனுடைய உண்மை பொருளை நான் உங்களுக்கு விளக்கு கிறேன் 


கன்னி நூல் என்பது கன்னிகழியாத பிள்ளை கையால் நூல் நூற்க சொல்லி அந்த நூலில் மஞ்சள் தடவி வைத்துகொள்ள வேண்டும் இதுதான் கண்ணிநூல் இந்த கன்னி நூல் காப்புகட்டிதான் மூலிகை பிடுங்குவார்கள் .இதற்கு இன்னொரு முறையும் கூறுவார்கள் தாமரை தண்டை உடைத்தால் அதிலும் நூல் வரும் அதையும் உபயோகப்படுத்தலாம் .

சரி இனி வசியத்திற்கான முறையைப்பார்ப்போம் 

வெள்ளை எருக்கலன் வேர் 
செம்பருத்தி வேர் 
செவ்வகத்தி வேர் 

இந்த மூன்றையும் சாபம் நிவர்த்தி செய்து வேர் அறாமல் பிடுங்கி கொண்டுவந்து அந்த வேரை மேற்படி நூலால் தாயத்து போல சுற்றி கட்டி அதில் ஒரு கோழி அறுத்து ரத்தம் தெளிக்கவும் 

இதனை இப்போது உடலில் அணியக்கூடாது தேவைப்படும் பொது மட்டும் அணியவேண்டும் இதனால் சர்வ வசியமும் உண்டாகும் ஆண் பெண் வசியம் முதற்கொண்டு சகலமும் உங்களுக்கு வசியமாகும் 

இந்த தாயத்தை எப்போதும் அணிந்தால் விந்து நஷ்டமாகும் 


இதனை இடுப்பில் தொப்புளுக்கு நேராக கட்டிக்கொண்டு பெண்ணிடம் உடலுறவு கொண்டால் விந்து இறங்காது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உடலுறவு கொள்ளலாம் அந்த தாயத்தை முதுகு பக்கம் தள்ளிவிட்டால் உடனே விந்து வெளியேறும் .இதனை அடிக்கடி உபயோகிப்பது உடல் நலத்திற்கு கேடு விளையும் .